Published On: Mon, Feb 21st, 2011

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

அன்னையே தாயே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்
ஈட்டி கொண்டு
எழுத வைத்த ஈகைத்தாயே.

வீரத்தின் விளை நிலமே
விண்ணையும் விஞ்சிய
வீரனை விடுதலைக்கு
ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,

பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை
பார் போற்ற பிறப்பெடுத்து
பாலூட்டி வளர்த்த பார்வதியே!

பொக்கிஷமே புண்ணியமே
காலத்தால் அழியாத காவலனாம்
சூரியனை பெற்றெடுத்த
கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,

நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே,

சோலை விருட்சம் அம்மா-நீ
சொந்தம் நாங்கள்
துயரம் கண்டாயோ-எம்
நெஞ்சு கனக்க
நிலையகன்று சென்றனையோ,

காற்றானாய்
உன் கண்மணிகள்
கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ
பாலூட்டி வளர்த்த
எம் தலைவன் பரிதவிப்பான்-அதை
மறந்தாயோ?,

நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்
நினைவுகள்
என்றும் சங்கமிக்கும்,

கனகதரன்,

History of Prabakaran & LTTE