சிட்னி மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிய இளைஞனின் கருத்து.
சிட்னியில் அவுஸ்திரேலியா, சிறிலங்கா இரு அணிகளுக்கும் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு நாங்கள் தமிழர்கள் நாங்கள் தமிழீழத்தைத் சேர்ந்தவர்கள் என்பதை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் துணிவுடனும் பெறுமையோடும் துணிந்து போராடுவோம் என்று சொல்வதற்காக எங்களுடைய தமிழீழத் தேசியக் கொடியை பறக்கவிட்டேன்.
பல ஊடகங்களில் எமது கொடியை கவால்துறையினர் பறித்ததாக வெளியிடப்பட்டடுள்ளது. ஆனால் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை பல ஆயிரக்கணக்கான சிங்களவர்களின் மத்தியில் தேசியக்கொடியை பறக்கவிட்டேன். கொடியை பார்த்த சிங்களவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.
பின்பு காவல்துறை என்னிடம் கூறியது துடுப்பாட்டத்தை பார்வையிடுவதென்றால் கொடியை தம்மிடம் தரலாம் இல்லை என்றால் தம்முடன் பேசுமாறு கேட்டுகொண்டனர். பின்பு எமது தமிழீழ அழிப்பை பற்றி காவல்துறையிடம் கூறினேன் அதற்கு காவல்துறை எங்களை பாராட்டியது. ஆனால் பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மத்தியில் நாங்கள் தேசியக்கொடியை பறக்கவிடுவதால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறினார்.
நாங்கள் இங்கு பிரச்சணைகளை ஏற்படுத்த வரவில்லை எங்களது போராட்டத்தை எடுத்து சொல்வதற்காகவே இங்கு வந்தோம் எடுத்தும் காட்டிவிட்டுடோம். ஆனால் எங்களுடைய கொடியை நாங்கள் யாரிடமும் கொடுப்பதற்கு தயார் இல்லை நாங்களாகவே வெளியேருகின்றோம் என்று காவல்துறையினருக்கு தெரிவித்தோம்.
எமது நாட்டில் 60 வருடங்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவம் தமிழின அழிப்பை செய்து கொண்டு வருகின்றான். ஆனால் உலக நாடுகளை ஏமாற்றி தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்றான். துடுப்பாட்ட போட்டியில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுதான் என்று சுட்டிக்காட்டுகின்றான். ஆனால் நான் சிறிலங்கன் இல்லை நான் தமிழன்.
பல இலட்சக் காணக்கான தமிழ் மக்களை கொன்று இனஅழிப்பு செய்த சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு போதும் ஆதரவு கொடுக்க மாட்டோம்.
தமிழீழத்தில் எமது தேசியக் கொடியை பறக்கவிடவில்லை என்றாலும் புலத்தில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் பறக்கும், அதே போல ஒரு நாள் ஐநாவிலும் தமிழீழத் தேசியக் கொடி பறக்கத்தான் போகிறது.
நான் எல்லா இளைஞர்களுக்கும் கூறவிரும்புகின்றேன். சிறிலங்கா அரசாங்கம் எந்த சதித் திட்டங்களை கொண்டுவந்தாலும் எந்த விதத்திலும் எதிர்த்தாலும் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கோ எமது தேசியக் கொடியை பறக்க விடுவதற்கோ ஒரு போதும் தயங்கக் கூடாது.
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”



















கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர்
மே16 2009 இரவு வரை எம் செவிகளோடு உறவாடிய புலிகளின்
30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன்
நந்திக் கடலும் காலிமுகத் திடலும்
Tamil community members re-affirm call for justice on War Crimes Day May 18 2012
Former Sri Lanka Tamil Tiger rebels ‘disappear’
Is BBC guilty of Genocide of Tamils in Sri Lanka?
Raising concerns with UK companies trading with Sri Lanka
No unitary is our understanding: TNA says sharing stage with Indo-US diplomats




